Wednesday, February 5

சாலை பணியாளர்கள் கருப்பு துணி அணிந்து ஒப்பாரி போராட்டம்!

சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு இன்று சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் கருப்பு துணி முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை பணியாளர்கள் கருப்பு துணி அணிந்து ஒப்பாரி போராட்டம்!<br>

சாலை பணியாளர்களின் 41 மாத பணியிடை நீக்கம் காலத்தை சட்டப்படி பயன் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது, ஆனால் தமிழக அரசு இதுவரை அதை நிறைவேற்றவில்லை என்று அவர்கள் கூறினர். மேலும், தமிழ்நாட்டில் 52 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 3817 கோடி ரூபாய் சுங்கவரி வசூலாகும் என்ற நிலையையும், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நெடுஞ்சாலைத்துறை சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளது.

சாலை பணியாளர்கள் கருப்பு துணி அணிந்து ஒப்பாரி போராட்டம்!<br>

இந்த போராட்டத்தின் பகுதியாக, சுமார் 50 பேர் சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கருப்பு துணி அணிந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலை பணியாளர்கள் கருப்பு துணி அணிந்து ஒப்பாரி போராட்டம்!<br>
இதையும் படிக்க  "தண்ணீர் வழங்க கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *