Saturday, June 28

கோவையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்…

கோயம்புத்தூர் நகரில் கடந்த 3 மணி நேரம் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கிய பகுதிகளில், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களின் கீழ் தீவிரமாக செயல்பட்டு மழைநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்...

அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி பள்ளி அருகிலுள்ள பாலம், காளீஸ்வரா மில் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சிவானந்தா காலனி, ஏ.ஆர்.சி பாலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மாநகராட்சி அலுவலர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து, நீரை வெளியேற்றினர்.

இதன் மூலம் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டது. மேலும், மழைநீர் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம்...
 
இதையும் படிக்க  விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதை ஒட்டி அரசு மரியாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *