Thursday, May 15

கோவை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

கோவை விமான நிலையத்தில், ஷார்ஜாவுக்கு வாரத்திற்கு ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இன்றும் (ஆகஸ்ட் 26) காலை 3.45 மணியளவில் ஷார்ஜா விமானம் கோவையை வந்த பிறகு, அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பயணிகள் யாரும் அந்த தங்கத்திற்கு உரிமை கோராததால், தற்போது இதுகுறித்து தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க  "3 கி.மீ. நடந்தே பொதுமக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்,"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *