ஜவுளி கடையில் தீ விபத்து

fire.1.2272551 - ஜவுளி கடையில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மேற்கு ரத வீதியில்  உள்ள ஜவுளி கடையில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.  3 அடுக்குகள் கொண்ட இக்கடையில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டி சென்றுள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை திடீரென பூட்டிருந்த கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கி உள்ளது. இதை அறிந்த பொதுமக்கள்,  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு  வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர், தீயை நீண்ட நேரம் போராடி அனைத்தனர்.
இருப்பினும் முதல் தளத்திலிருந்த பல லட்சம் மதிப்பிலான  ஜவுளி வகைகள் முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவிநாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க  கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33-ஆக உயர்வு! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *