Friday, June 27

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், புதன்கிழமை காலை பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவான சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், இந்த மிரட்டல் வெறும் புரளி என உறுதியாகி, வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்பொழுது, இந்த மிரட்டலை ஏற்படுத்திய மர்ம நபரை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  சவுக்கு சங்கர் வழக்கில் குண்டர் சட்டம் மனித உரிமைகளை மீறுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *