Saturday, June 28

ஜிப்மர் மருத்துவர்கள் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராட்டம்…

கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 13) 2 மணி நேர பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, ஜிப்மர் மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து, மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அவசரமாக அமல்படுத்த வேண்டும், பெண் மருத்துவர் படுகொலையைப் பற்றிய விசாரணை திறந்தவெளியில் நடத்தப்பட வேண்டும், தவறுக்கு பொறுப்பானவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், மற்றும் மருத்துவர்களுக்கு பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளிப்புற நோயாளிகள் பிரிவு வழக்கம்போல இயங்கியது, மேலும் மூத்த மருத்துவர்கள் பணியில் இருந்தனர்.

மேலும், இன்று மாலை புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு நோக்கி, அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மருத்துவர்களும் பங்கேற்கும் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க  மணவெளி சட்டமன்ற தொகுதியில் புதிய கான்கிரீட் வாய்க்காலுக்கான பூமி பூஜை.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *