Monday, January 13

சீமான்-வருண் குமார் ஐபிஎஸ் விவகாரம்:எம்பி கார்த்திக் சிதம்பரம் கருத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எம்பி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எம்பி கார்த்திக் சிதம்பரம், சீமான் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் விவகாரத்தில் கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:”அரசியல் தலைவரும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல. இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி தலையிட்டு சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக தீர்வு காண வேண்டும்.”

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்த வழக்கில் தனிநபர் ஈடுபட்டதாக கூறப்படுவது சந்தேகத்திற்குரியது. வழக்கில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், சிபிஐ விசாரணை தேவையில்லை,” என்றார்.

நாடு ஒரே தேர்தல் திட்டம்:
நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இது விரோதமானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பாஜகவிடம் இல்லை. எனவே, இந்த மசோதா நிறைவேற வாய்ப்பு குறைவு,” என்றார்.

அரசு பள்ளிகள் மற்றும் மகளிர் உரிமைத்தொகை:அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு தேவையானது என்றும், மகளிர் உரிமைத்தொகை 12 மாதங்களுக்கு வழங்கப்படும் என்பதால் பொங்கல் தொகுப்பில் ரூ.1000 வழங்காதது பெரிய குற்றம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு சோசியல் மீடியா விமர்சனம்:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அவர், “அஷ்டமத்து சனி காலத்தில் ஆறுபடை வீடு சென்று சாட்டை அடி வாங்கினால் நிவாரணம் கிடைக்கும் என சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது. இதனால், அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார்,” என நகைச்சுவையாக தெரிவித்தார்.



இதையும் படிக்க  வங்கதேசத்தில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *