Tuesday, January 21

ஃபென்ஜல் புயல் பாதிப்பு: நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஃபென்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

புயலால் மிகுந்த பாதிப்புக்குள்ளான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணமாக வழங்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும்.

வெள்ளத்தால் உயிரிழந்த எருது மற்றும் பசுக்களுக்கான இழப்பீடாக ரூ.37,500 வழங்கப்படும்.

சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்புகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவேற்பாக உள்ளது. நிவாரண பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

இதையும் படிக்க  அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *