Friday, June 27

சோனியா,ராகுல் காந்தி வாக்களிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். ஆறாம்கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். கடந்த இரு மக்களவைத் தோ்தல்களிலும் டெல்லியின் அனைத்துத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்த நிலையில், இந்த போட்டிக் களம், பாஜகவுக்கு சவாலாக உள்ளது. மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் இந்த கட்சி களத்தில் உள்ளது.எதிரணியில் ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடுகின்றன.

இதையும் படிக்க  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *