Tuesday, July 1

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

குஜராத் மாநிலம்,  பொய்ச்சா பகுதியில் நர்மதா நதியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.செவ்வாய்க்கிழமை காலை சூரத்தில் இருந்து வந்த இவர்கள் நர்மாத நதியில் குளித்துள்ளனர்.அப்போது திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்து விரைந்து வந்த அதிகாரிகள் காணாமல் போன ஏழு பேரைத் தேடும் பணியைத் தொடங்கினர்.தற்போது, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் வதோதரா தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க  காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *