ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

Narmada River Jabalpur India 1715751591976 1715751604456 - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

குஜராத் மாநிலம்,  பொய்ச்சா பகுதியில் நர்மதா நதியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.செவ்வாய்க்கிழமை காலை சூரத்தில் இருந்து வந்த இவர்கள் நர்மாத நதியில் குளித்துள்ளனர்.அப்போது திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்து விரைந்து வந்த அதிகாரிகள் காணாமல் போன ஏழு பேரைத் தேடும் பணியைத் தொடங்கினர்.தற்போது, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் வதோதரா தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *