Monday, August 11

தமிழ்நாடு

10வது சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா !…

10வது சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா !…

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இன்று 10வது சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா தொடங்கியது. கடந்த 9 ஆண்டுகளாக தைப்பொங்கலின் முதல் நாளில் பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் இந்த திருவிழா நடந்துவருகிறது. இந்த ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் மீடியா குளோபல் பாக்ஸ் எனும் தனியார் நிறுவனம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில், குறிப்பாக குளிர் பிரதேசங்களில் வெப்பக் காற்று பலூன்கள் பரவலாக பறக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில், குறிப்பாக பொள்ளாச்சியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக இவை வானில் பறக்கவிடப்படுகின்றன. இந்த ஆண்டு 10வது சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழாவிற்கு அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து 12 பலூன்கள் அழைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வெப்ப கா...
கார்மல் கார்டன் பள்ளியில் 60ஆம் ஆண்டு வைரவிழா…

கார்மல் கார்டன் பள்ளியில் 60ஆம் ஆண்டு வைரவிழா…

கோவை
கோவை சுங்கம் பகுதியின் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைரவிழா மிகப்பெரிய தொடர் கொண்டாட்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயுஸ் தலைமையில் நடைபெற்றது.கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியின் ஆண்டு மலரின் முதல் பதிப்பை வெளியிட்டார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நந்தகுமார், செயலர் ராஜ்குமார், முதன்மை குரு ஜான் ஜோசப், மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பிரான்ஸ் ஜோ, தன்ராஜ் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கும் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.இந்த நிகழ்...

“தண்ணீர் வழங்க கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை”

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் முனியாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததி இன பெண்கள், தங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.இந்த கிராமத்தில் சுமார் 40 அருந்ததி இனக் குடும்பங்கள் வாழ்கின்றனர். இங்கு குடிநீர் வழங்குவது மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வாக்கப்பட்ட வழியாகவே நடைபெறுகிறது. கடந்த காலத்தில் அந்த சாலையின் விரிவாக்கப் பணிகள் தொடங்கியபோது, குடியிருக்கும் பகுதிக்குச் செல்லும் குழாயின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடந்த ஒருமாதமாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், இன்று சுமார் 15 பெண்கள் தங்களுடன் காலிக்குடங்களுடன் சென்று, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உடனடி நடவடிக்கை எடுத்து தண்ணீர் விநியோகம் செய்ய கோரியும் மனு அளித்தனர்.    ...
“இனிகோ இருதயராஜ் கூறிய ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: வணிகர் சங்கங்கள்”

“இனிகோ இருதயராஜ் கூறிய ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: வணிகர் சங்கங்கள்”

திருச்சி
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினரால் எதிர்ப்பு சந்தித்துள்ளார்.திருச்சி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவராக இருந்த எஸ்.பி.பாபு, இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:மலைக்கோட்டையில் லிஃப்ட் (LIFT) அமைப்பதற்கான உரையில் திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் நன்றி தெரிவித்திருந்தாலும், அவர் திருச்சி தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், அங்கு உள்ள சிறு வணிகர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பல கோடி ரூபாய் வரி மற்றும் வாடகை பணங்கள் நிலுவையில் உள்ளன. மேலும், அங்கு அமைக்கப்பட்ட கார்ப்பரேட் கடைகள் சட்டப்படி கட்டப்படாவிட்டால், அதையும் அவர் குறிப்பிட்டிருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும்.ஏழைகள், நடுத்தர மக...
பொள்ளாச்சியில் பத்தாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா நாளை தொடக்கம்!

பொள்ளாச்சியில் பத்தாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா நாளை தொடக்கம்!

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பத்தாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா நாளை தொடங்குகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக வெளிநாட்டுகளில் மட்டுமே பறக்க விடப்பட்ட வெப்ப காற்று பலூன்கள், இந்நாளில் பொள்ளாச்சி பகுதியில் பறக்க விடப்படுகின்றன. இந்த ஆண்டு திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் ஆகிய ஏழு நாடுகளிலிருந்து 11 பலூன்கள் பங்கேற்கின்றன. இவை அனைத்தும் பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து வானில் பறக்க விடப்படுகின்றன. இந்த ராட்சத பலூன்களில் வெப்ப காற்றை நிரப்பி, பிரத்யேக பைலெட்டுகளை கொண்டு வானில் பறக்க, 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறைக்காக இந்த திருவிழா நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த சிறப்பான நிகழ்ச்சியை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.  ...
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்…

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்…

தமிழ்நாடு
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் வழக்கம். இந்த வகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.இந்த நிலையில், பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வாடி வாசலுக்கு முன்பு தேங்காய் நார் கொட்டுதல் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்துதல் போன்ற பணிங்கள் தீவிரமாக நடைபெறுகிறது.இந்த முறை, 2,035 காளைகளும் 1,735 மாடுபிடி வீரர்களும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றனர். போட்டிக்கான முன்பதிவு ஆன்லைனில் செய்யப்பட்டு, ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரத்தில், 15-ஆம் தேதி பாலமேட்டியில், 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மது அருந்தி வந...
பெரம்பை கிராமத்தில் போகி பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பை கிராமத்தில் போகி பண்டிகை கொண்டாட்டம்

தமிழ்நாடு
விழுப்புரம் மாவட்டம் பெரம்பை கிராமத்தில் போகி பண்டிகையை கொண்டாடும் வகையில், பழைய பொருட்களை எரித்து புதியவற்றை வரவேற்றனர்.தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல், நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் நாளாக போகி பண்டிகை கொண்டாடப்படும். மார்கழி மாதத்தின் நிறைவுநாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்பதே போகி பண்டிகையின் நோக்கமாகும். இந்த நாளில், வீடுகளின் முன்பு தீ வைத்து தேவையற்ற பொருட்கள் மற்றும் பழைய ஆடைகளை எரிக்கின்றனர். பெண்கள் மந்திரங்கள் சொல்லி, பாடல்கள் பாடி அந்த தீயை சுற்றி வழிபடுகின்றனர். நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றிணைந்து இந்த நாளை கொண்டாடுகின்றனர். புதிதாக விளைந்த அரிசி, பழங்கள் மற்றும் விளைச்சல் மூலம் கிடைத்த பணம் ஆகியவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து, போகி பண்டிகையை கொண்டாடுவது சில இடங்களில் வழக்காக உள்ளது.இதனைத் தொடர்ந்து, வி...
“டேங்கர் லாரி விபத்து: ஒருவர் பலி,ஓட்டுநர் மாயம்”

“டேங்கர் லாரி விபத்து: ஒருவர் பலி,ஓட்டுநர் மாயம்”

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கொச்சினில் இருந்து தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் லாரியில் பயணம் செய்த ஒருவர் பலியானதும், மற்றொருவர் படுகாயம் அடைந்ததும், ஓட்டுநர் மாயமானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்து இன்று அதிகாலை மானாமதுரை சிப்காட் பின்புறம் தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. கேரள மாநிலம் கொச்சினிலிருந்து தார் ஏற்றிக் கொண்டு இராமநாதபுரம் நோக்கி சென்ற டேங்கர் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி முழுவதும் சிதறியதால், சம்பவம் அறிந்த காவல்துறையினர் வந்தபோது இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்தனர். அவற்றை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஒருவரின் உயிர் ப...

“ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு அரசின் ஏமாற்று வேலை”

தமிழ்நாடு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டனியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் மணிமேகலை, மாநில பொது செயலாளர் மயில் மற்றும் மாநில பொருளாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற நிலையில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு பின், மயில் மாநில பொது செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.மயில் கூறியதாவது: "தமிழக சட்டமன்றத்தில் நிதியமைச்சர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதளின்படி ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இது அரசின் ஏமாற்று வேலை ஆகும், இது கண்டனத்துக்குரியது. 4 ஆண்டுகளாக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. அரசு அதை திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ...
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் விழா

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் விழா

திருச்சி
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் விழா, மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக் முன்னிலையில் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இனிப்பு பொங்கல் வழங்கி, விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொங்கல் சீர் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட துணை தலைவர் எஸ். வி. பட்டேல், கோட்டத் தலைவர்கள் வெங்கடேஷ்காந்தி, மலர்வெங்கடேஷ், ராஜா டேனியல், அழகர், பிரியங்கா பட்டேல், எட்வின், கனகராஜ், அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் ஷிலா செவ், அஞ்சு, கோகிலா, மாரீஸ்வரி, ஜெனிபர், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகர், ஐடி பிரிவு கிளமெண்ட், இளைஞர் காங்கிரஸ் வ...