Sunday, April 27

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்…

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் வழக்கம். இந்த வகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.

இந்த நிலையில், பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வாடி வாசலுக்கு முன்பு தேங்காய் நார் கொட்டுதல் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்துதல் போன்ற பணிங்கள் தீவிரமாக நடைபெறுகிறது.

இந்த முறை, 2,035 காளைகளும் 1,735 மாடுபிடி வீரர்களும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றனர். போட்டிக்கான முன்பதிவு ஆன்லைனில் செய்யப்பட்டு, ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரத்தில், 15-ஆம் தேதி பாலமேட்டியில், 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மது அருந்தி வந்தவர்கள் மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்படாது எனவும், பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.

 
இதையும் படிக்க  கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: 2024-25 ஆம் ஆண்டில் 1 லட்சம் வீடுகளுக்காக கோடி நிதி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *