Saturday, May 24

ஹோண்டா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்…

இந்தியாவின் மின்சார வாகன சந்தையை கவரும் வகையில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் ஆக்டிவா இ மற்றும் க்யுசி1 ஆகிய இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு 34 சதவீதம் வளர்ச்சி விகிதத்தில் முன்னேறி வரும் மின்சார வாகன சந்தைக்கு போட்டியிடும் நோக்குடன், ஹோண்டா இந்த ஸ்கூட்டர்களை மாற்றக்கூடிய மற்றும் நிலையான பேட்டரிகளுடன் வடிவமைத்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் போன்ற பாரம்பரிய வாகன தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, ஏதர், ஓலா போன்ற பிரத்யேக மின்சார வாகன தயாரிப்பாளர்களுடனும் ஹோண்டா நேரடியாக போட்டியிட உள்ளது.

புதிய ஆக்டிவா இ மற்றும் க்யுசி1 வாகனங்களுக்கான முன்பதிவு 2024 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இவை தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன், நீண்ட பயணத்திற்கு உகந்த பேட்டரி திறன் மற்றும் ஆற்றல் செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய அறிமுகம், மின்சார வாகன சந்தையில் ஹோண்டாவின் நிலையை உறுதிசெய்யும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க  புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:முன்பதிவு ஆரம்பம்...

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *