
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதி, கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானதொரு விபத்து நடைபெற்றுள்ளது.
கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் ஆறு மாணவர்கள் கொண்ட குழு, ஆழியார் அணை மற்றும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். நா.மு.சுங்கம் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவியும் மாணவரும், எதிரே வந்த அரசு பேருந்துடன் மோதியதில், சம்பவ இடத்திலேயே மாணவி காவிய ஸ்ரீ மற்றும் மாணவன் சபரி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆழியார் காவல் நிலைய போலீசார், இறந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.