Saturday, April 12

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்யும் வகையில் மணல் மூட்டைகள், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் என தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிப்பு குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிப்புகளை சரி செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர். வடகிழக்கு பருவமழை காலங்களில் தீபாவளி போன்ற பண்டிகைகள் வர இருப்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட நெடுஞ்சாலை துறை சார்பில் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் மத்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  திருப்பதி செல்வோர் கவனத்திற்கு.....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *