Saturday, June 28

ராட்சத பலூன் தரை இறங்கியதில் பரபரப்பு…

பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில், ராட்சத யானை வடிவிலான பலூன் திடீரென கேரளாவின் கன்னிமாரி முல்லந்தட்டில் தரை இறங்கியது. அந்த நிகழ்வில், வெளிநாட்டைச் சேர்ந்த பைலட்டுகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பயணம் செய்தனர். முக்கியமாக, அந்த சிறுமிகள் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களையும் அணிந்து இல்லையென தெரிவிக்கப்படுகிறது. ராட்சத பலூன் நெல் வயல்வெளியில் தரையிறங்கியதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், உள்ளூர் மக்கள் உதவியுடன், அந்த பலூன் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, சிறுமிகள் உயிர்த்தபினர்.

இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது, பைலட்டுகளின் விதிமுறைகள் மற்றும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக செய்துள்ளதாக உறுதிப்படுத்தினர்.

 
இதையும் படிக்க  15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *