Thursday, October 30

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா….

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 ஆண்டுக்கான காலண்டர் மற்றும் டைரி வெளியீட்டு விழா, பொங்கல் கொண்டாட்டத்துடன் சேர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கோவை ஆவாரம்பாளையம் எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று காலண்டர் மற்றும் டைரியை வெளியிட்டார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா....
கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா....

இந்த விழாவில் எஸ்என்ஆர் சன்ஸ் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கற்பகம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆதிபாண்டியன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஜே. முகமது ரஃபி உள்ளிட்ட பல முக்கிய தனிநபர்கள் பங்கேற்றனர்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா....
கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா....

கடந்த ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழிந்து வரும் உயிரினங்களை ஆவணப்படுத்திய ஓவியங்களின் காலண்டர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த ஆண்டிற்கான காலண்டர் “காஞ்சிமாநதி” என்ற கருப்பொருளில் நொய்யல் நதியின் அழகையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டும் புகைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, பத்திரிகையாளர் மன்றத்தின் பாரம்பரியத்தையும் சமூகப் பொறுப்பையும் வெளிப்படுத்தியது.

இதையும் படிக்க  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கிய கோவை ஆட்சியர்!
கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா....
கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா....
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *