Wednesday, September 10

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா…

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் விழா: 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 86 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தின் 26 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல துறைகளின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பாரா ஒலிம்பிக் வீரர்கள் தங்கவேலு மாரியப்பன் மற்றும் துளசிமதி முருகேசன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், இவ்விழாவின் முக்கிய நோக்காக விளையாட்டு வீரர்களை உருவாக்குவது என கூறினார்.

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 11 லட்சம் பேர் போட்டிகளில் பங்கேற்றதாகவும், பல மாவட்டங்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கியதாகவும் தெரிவித்தார்.

 
இதையும் படிக்க  TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *