
புதுச்சேரி:நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, அவரின் சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
இன்றைய விழா புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது. லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகே உள்ள நேதாஜி சிலைக்கு, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் திருமுருகன், சாய் சரவணகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு பல அரசியல் கட்சி தலைவர்களும் சமூக அமைப்புகளும் சிறப்பு மரியாதையை செலுத்தினர்.