
புதுச்சேரி மாநில அதிமுக மருத்துவ அணி, மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஜோதி கண் மருத்துவமனை இணைந்து புதுச்சேரி மாநில அதிமுக மருத்துவர் அணி தலைவர் டாக்டர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் இன்று உப்பளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நேதாஜி நகர், ஒலாந்தரியா சமுதாய நலக் கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமை திறந்து வைத்தார்.
இந்த முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, பல், தொண்டை, அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் இந்த முகாமிலிருந்து பயனடைந்தனர். சிகிச்சை பெற்ற அனைவருக்கும் ஊக்குவிக்கும் வகையில் சர்க்கரை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் மதிவாணன், புதுச்சேரி நகர முன்னாள் செயலாளர் தேசிங்குராஜா, உப்பளம் தொகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் நரேஷ், வினோத், பாஸ்கர், முத்துக்குமரன், அன்பழகன், சதீஷ், குமரன், விக்னேஷ்மார்க், மத்தியாஸ், நவீன், பிரவீன், மார்ட்டின், ஆகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை வழங்கப்பட்டது.