Saturday, June 28

தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது :சத்யபிரத சாஹூ



* தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67, தருமபுரியில் 75.44, சிதம்பரத்தில் 74.87 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35, தென் சென்னையில் 67.82 சதவீதமும்  பதிவாகி உள்ளன. கடந்த 2019 தேர்தலைவிட தற்போது வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

* அதேபோல், மாலை 6 மணிக்கு பிறகும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. துல்லியமான வாக்குப்பதிவு விவரம் 20-ம் தேதி (இன்று) மதியம் தெரிவிக்கப்படும்.

* தமிழக எல்லைப் பகுதிகளில் மட்டும் இனி தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மூலம் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.இருப்பினும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம்எடுத்து செல்லக்கூடாது.  தமிழகத்தில் தேர்தல் சுமுகமான முறையில்  நடந்து முடித்தது என்றார்.

இதையும் படிக்க  பிரதமர் மோடி  வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *