Tuesday, April 22

எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்…

முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்கள்...

இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேலும் கழகத்தில் இணைந்த கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியிலும், அரசியலிலும் சிறந்து விளங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.

இதையும் படிக்க  மொழிப் பிரச்சினையில் அரசியல்: H. ராஜா கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *