Wednesday, September 10

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாணையத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் அக்டோபர் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த தேதி அறிவிக்கப்படும்.

குரூப் 4 தேர்வு விவரங்கள்

அறிவிப்பு வெளியீடு: ஜனவரி 30, 2024

விண்ணப்ப நாள்: பிப்ரவரி 28 வரை

பணியிடங்கள்: 8,932

தேர்வு தேதி: ஜூன் 9, 2024

இம்முறை தேர்வில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

நேர்முகத் தேர்வு இல்லை

குரூப் 4 தேர்வில், எழுத்து தேர்வில் உரிய கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஆவணச் சரிபார்ப்புக்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். இந்நிலையில், தற்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்க  நபார்டு வங்கியில் காலியாக உள்ள நிதி துறை பணியிடங்கள்...

முடிவு வெளியீட்டு தேதி

28ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக்குப் பிறகு, தேர்வு முடிவுகள் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *