Thursday, July 31

தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட்: திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது…

போலி பாஸ்போர்ட்: திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது…

தமிழ்நாடு, திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தில் சோதனை மேற்கொண்ட குடியுரிமை பிரிவு அதிகாரிகள், போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை இந்திரா நகரைச் சேர்ந்த முகமது அன்சாரி (வயது 50) மலேசியா செல்ல விமான நிலையம் வந்திருந்தார். அவரை சோதனையிட்ட அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போலியாக மாற்றப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 56) மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்திருந்தார். அவரையும் சோதனையிட்ட போது, போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் இருவர் மீதும் விசாரணை நடத்தி வருகின்றனர்....
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை – தமிழக அரசின் மனு தள்ளுபடி…

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை – தமிழக அரசின் மனு தள்ளுபடி…

அரசியல், தமிழ்நாடு
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக, சட்டவிரோதமாக சோதனை நடத்தப்பட்டது எனக் கூறி, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, “சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது” என அமலாக்கத்துறை விளக்கமளித்தது.தரப்புகள் அடிப்படையில் அனைத்து வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இன்று (ஏப்ரல் 23) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. தேச நலனுக்காகவே சோதனை மேற்கொள்ளப்பட்டது” எனக் கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும், “நள்ளிரவில் சோதனை நடந்தபோது ...
கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக இரண்டு மையங்கள் திறப்பு…

கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக இரண்டு மையங்கள் திறப்பு…

கோவை
கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை  மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் , திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்கள் பயன்பெறும் வகையில் தனியார் அமைப்புகள் சார்பில் 24 மணி நேர தண்ணீர் மையம் மற்றும் தாய்மை கூடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.சுமங்கலி ஜுவல்லர்ஸ், ஹெல்பிங் ஹர்ட்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் நிர்மலா ஆகியோர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.இதன் மூலம் நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பயனடைவர். இந்த திறப்பு விழாவின் போது சுமங்கலி ஜுவல்லர்ஸ் சேர்மன் விஸ்வநாதன், இயக்குனர் அஷ்யந்த், ஹெல்பிங் ஹார்ட்ஸ் நிறுவனர...
ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான்…

கோவை
உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீல நிற பலூன்கள் பறக்க விட செய்தார். அதனை தொடர்ந்து வாக்கத்தான் நிகழ்வை துவக்கும் போது கொடியை ஆட்டிசம் சம்பாதித்த குழந்தையின் கையிலேயே கொடியை பிடித்து அசைக்க செய்து வாக்கத்தானை துவக்கி வைத்தார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் அழுத்தியது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், ஆட்டிசம் குறித்து மக்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பல்வேறு அறிவுரைகள் விழிப்புணர்வுகள் கொண்டு வர வேண்டும் என்றார். இந்த நோய்க்கான முதல் கட்ட அறிகுறிகளை கண்டுபி...
தமிழக அரசு பள்ளிகளின் மின்கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் – மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது

தமிழக அரசு பள்ளிகளின் மின்கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் – மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது

தமிழ்நாடு
சென்னை: தமிழக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான மின்கட்டணத்தை அரசே நேரடியாகச் செலுத்தும் முறை மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் மின்கட்டணம் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மின்கட்டணத்தை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களே செலுத்தி வருகின்றனர். இதற்காக, ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படும் சில்லறை செலவுகளுக்கான நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது.மின் கட்டண செலவில் சிக்கல்:தற்போது, உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்றவற்றின் அறிமுகத்தால் மின் கட்டணம் பெரிதளவில் அதிகரித்துள்ளது. ஆனால், சில்லறை செலவுகளுக்கான நிதி சரிவர கிடைக்காத காரணத்தால், பல தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்திலேயே மின்கட்டணத்தை செலுத்தி வர...
TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி…

TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி…

கோவை, விளையாட்டு
கோவை, சுந்தராபுரம் பகுதியில் MSD TURF இல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வழிகாட்டுதலின் படி மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் ஜெயசிம்மன் தலைமையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் S.R.A செந்தில் மற்றும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் மா.ப. ரோகிணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்கு கோப்பைகள்  மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் முன்னால் அமைச்சர் சண்முகவேலு, டேவிட் அண்ணா துறை, கே. சுகுமார் Ex.MP., மற்றும் N.R. அப்பாதுரை , P. சரவணன் , P. பாஸ்கரன், S.R. சதிஸ்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இதில் மாநில அம்மா பேரவை துணைத்தலைவர்கள், இளைஞரணி துணைத்தலைவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நக...
“கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா”

“கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா”

கோவை
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா  கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி  தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் முதல்வா் முனைவா் சங்கீதா  ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக  கான்பூா், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் முனைவா் நச்சிகேதா திவாரி கலந்து கொண்டு பேசினார்… அப்போது பேசிய அவர்,உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் நாகரீகத்தில்  ஒரு அடிப்படை உண்டு என்றும்  ஐரோப்பிய நாடுகள் மொழியையும் மத்திய கிழக்கு நாடுகள் மதத்தையும்  ஆப்பிரிக்க நாடுகள் பழங்குடியின பண்புகளையும் தம் நாகரிகத்தின் அடிப்படையாகக் கொண்டன என்றும் குறிப்பிட்டார். பாரத நாட்டின் நாகரிகத்தின் செழுமைக்கு மொழி,  மதம்,  உணவு, இனம் ஆகியன அடிப்படைகளாக அமையவில்லை என்ற...
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு புரூக்பீல்ட்ஸ் – ஆரோஹ் ஆதரவு!<br>

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு புரூக்பீல்ட்ஸ் – ஆரோஹ் ஆதரவு!

தமிழ்நாடு
கோவை புரூக்பீல்ட்ஸ் நிறுவனம்  சி.எஸ்.ஆர்.எனும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ஆரோஹ் எனும் அமைப்புடன் இணைந்து குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்...கோவையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் வணிக வளாக நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.எனும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு சமூக நல பணி திட்டங்களை தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்..இந்நிலையில் கடந்த  2013 ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கு முழுமையான பராமரிப்பை வழங்கி வரும்   ஆரோஹ் எனும் அமைப்பினருடன் இணைந்து புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் வழங்கி உள்ள ஆதரவு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு புரூக்பீல்ட்ஸ் வளாக அரங்கில் நடைபெற்றது..இதில்  ஆரோஹ் - கிவிங் ஹோப் அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பிந்து என் நாயர் பேசுகையில், தற்போது, நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட மருத்துவமன...
குறைந்த மின்னழுத்தம் தீர்வு – புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவிய மின்சார வாரியம்!

குறைந்த மின்னழுத்தம் தீர்வு – புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவிய மின்சார வாரியம்!

திருச்சி
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் பிரிவு சாலை, கீரமங்கலம் மற்றும் கிருஷ்ணா நகரில் தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் வீட்டு மின்சாதனங்கள் பழுதடையும் சிரமத்திற்குள் உள்ளாகினர். இந்த நிலை தொடராமல் இருக்க, பொதுமக்கள் மின்சார வாரியத்திடம் கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிணங்க, பிச்சாண்டார்கோவில் மின்சார வாரியத்தின் இயக்குதலும், காத்தலும் உதவி செயற்பொறியாளர் துரைராஜின் மேற்பார்வையில், மின்சார வாரிய ஊழியர்கள் 110 கிலோவாட் திறனுடைய இரண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை கீரமங்கலம், கிருஷ்ணா நகர் மற்றும் சாய்நகர் பிரிவு சாலைகளில் நிறுவினர். இத்தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தனது நன்றியை தெரிவித்தனர். ...
மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு தேவையில்லை –எம்.பி. ஈஸ்வரசாமி

மும்மொழிக் கொள்கை தமிழகத்திற்கு தேவையில்லை –எம்.பி. ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் ₹2.33 கோடி மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வசதிகளாக 6 வகுப்பறைகள், ஒரு ஆய்வகம் மற்றும் குடிநீர் வசதி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு கட்டிட வேலைகளைத் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன், காணியப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரசாமி, தமிழகத்தில் கல்விக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், கலைஞர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த முன்னேற்றம் தொடர்ந்துகொண்டிருக்கிறதையும் குறிப்பிட்டார். இந்தியாவின் மிக அதிகம் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டிலிருந்தே வருகின்றனர், அதிலும் பெண்கள் கல...