Thursday, July 31

கோவை

அருள்மிகு மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

அருள்மிகு மாசாணியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

கோவை
கோவை மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12.12.2024 அன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, 48 நாட்கள் நிலையான மண்டல பூஜை இன்று நிறைவடைந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளி கிருஷ்ணன் தலைமையில் நடந்த விழாவில் திருப்பரங்குன்றம் சிவாச்சாரியார் சிவஸ்ரீ ராஜபட்டர் குழுவினர் சிறப்பாக பூஜையை ஏற்பாடு செய்தனர். இதில் உதவி ஆணையர் கைலாச மூர்த்தி, சூரிய நாராயணர் கோவில் தம்பிரான் சுவாமிநாத சுவாமிகள், அறங்காவலர் மஞ்சுளாதேவி, கோவில் நிர்வாகம் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ...
“சந்திரமாரி பள்ளியில் புத்தாக்க கண்காட்சி: மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றார்”

“சந்திரமாரி பள்ளியில் புத்தாக்க கண்காட்சி: மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றார்”

கோவை
கோவை காளப்பட்டியில் அமைந்துள்ள சந்திரமாரி சர்வதேச பள்ளியில் புத்தாக்க வாரத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் துபாயின் லேப் ஆப் ஃபியூச்சர் இணைந்து, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் புத்தாக்க செய்முறை பிரம்மாண்ட திட்ட கண்காட்சியை ஒழுங்கு செய்தது. கடந்த ஐந்து நாட்களாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில், அவர்கள் குழுவாக சேர்ந்து ட்ரோன் தயாரிப்பு, ராக்கெட் ஏவுதல், ரொட்டிக்ஸ், ஏரோ மாடலிங் மற்றும் டெலிஸ்கோப் உருவாக்கம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை கற்கின்றனர். இந்த பயிற்சியின் போது, மாணவர்கள் தங்கள் செய்முறை படைப்புகளை நிகழ்த்தி, அவற்றின் செயல்பாட்டை விளக்கி காட்டினர். கண்காட்சியில் செயல்படும் ட்ரோன்கள், ராக்கெட்கள், ஏரோ மாடலிங் மற்றும் நுட்பமான ரோபோடிக்ஸ் வடிவமைப்புகள் போன்ற பல்வேறு படைப்புகள் கண்காட்சிக்கு இடம் பெற்றிருந்தன. பெற்றோர்கள், பிற பள்ளி மாணவர்கள் மற்...
176வது திருவள்ளுவர் உருவச்சிலை திறப்பு விழா…

176வது திருவள்ளுவர் உருவச்சிலை திறப்பு விழா…

கோவை
176 வது திருவள்ளுவர் திருவுருவச்சிலை VGP குழுமத்தின் தலைவர் டாக்டர் V.G. சந்தோஷம் திறந்து வைத்தார். குனியமுத்தூர் சரஸ்வதி இராமச்சந்திரன் வித்யாலயா மெட மேல்நிலைப்பள்ளியில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை திறப்புவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றதுஉலகப்பொதுமறையான திருக்குறள இயற்றிய தெய்வப்புலவர் திருவள்சுவரின் திருவுருவச் சிலை எங்களது பள்ளியில் நிறுவப்பட்டு, சிலை திறப்புவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாயின் சிறப்பு விருந்தினராக VGP உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமையர், செவாலியர், கலைமாமணி விருதுகளை பெற்ற VGP குழுமத்தின் தலைவர் டாக்டர் V.G. சந்தோஷம் அவர்கள் பங்கேற்றுத் தெய்வரிபுலவரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினார். விழாவில் பள்ளியின் தாளாளர் திரு. அந்தானகோபால் அவர்களும் பள்ளியின் அறங்காவலர்கள் திரு.ரவீந்திரஅறங்காவலகள் மற்றும் திரு. சுதர்ஷன் அவர்கள் சிறப்பித்தன...
கோவையில் 128-வது நேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவையில் 128-வது நேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் கொடியேற்றி மற்றும்இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில்  கோவை மாவட்டம் செயளாலர் V.P.S சௌந்தரபாண்டி தலைமையில் மற்றும் தமிழ் நாடு விவசாய கட்சியின் மண்டல தலைவர் குரூஸ் முத்து பிரின்ஸ் முன்னிலையில் கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதி விரிவாக்கம் பகுதியில் ஃபார்வேர்ட் பிளாக் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில்  பார்வேர்ட் பிளாக் கட்சியின் துணை செயலாளர் நேதாஜி ரமேஷ் கண்ணன் , பீளமேடு பகுதி செயளாலர் ஹரீஸ், மேகன்,சாம், சரவணன்,ஜோசப் பெலிக்ஸ், குட்டி மோகன், தினகர் ,அலெ...
எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி

கோவை
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள வெள்ளலூர் பேருந்து திடலில் முன்னாள் முதலமைச்சர் மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தாமோதரன் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனுடன், கிணத்துக்கடவு முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் மற்றும் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாச்சலம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி இதில் பங்கேற்றனர். பிறகு, பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, அங்குள்ள காமராஜர் கல்யாண மண்டபத்தில் கண் மருத்துவ முகாம் மற்றும் ஈசிஜி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன, இதில் பலர் கலந்து கொண்டு மருத்துவ சேவைகள் பெற்றனர்....
உழவர் சிலைக்கு மாட்டுப் பொங்கல் விழா…

உழவர் சிலைக்கு மாட்டுப் பொங்கல் விழா…

கோவை
கோவை:உக்கடம் பேருந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள போக்குவரத்து தீவுத்திடல் (ரவுண்டானா) பகுதியில் உழவு தொழிலையும், உழவர்களையும் போற்றும் விதமாக உழவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று, உழவுத் தொழிலுக்கு உதவியுள்ள கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, கோவையில் உள்ள உக்கடம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்ட உழவர் சிலைக்கு 'ஆர் கோல்டு' நிறுவனரான ரங்கசாமி மற்றும் 'பிளாக் ஷிப் மீடியா' நிறுவனர் சதீஷ்குமார் ஆகியோர் குடும்பத்துடன் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து, மாட்டுப் பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.    ...
மாவட்ட ஆட்சியர் மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

மாவட்ட ஆட்சியர் மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை
பொள்ளாச்சி அருகே ஆனைமலை நாகரூத் பகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடியினருடன் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், 84 குடும்பங்களுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், பழங்குடியினரின் நலத்துறை மூலம் அக்குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்தார். இந்த விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, ஆனைமலை வட்டாட்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  ...
குனியமுத்தூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

குனியமுத்தூர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா

கோவை
கோவை வடக்கு மாவட்டம் குனியமுத்தூர் பகுதி கழக திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா குனியமுத்தூர் பகுதி கழக வடக்கு மாவட்டத் தலைவர் லோகு தலைமையில் நடைபெற்றது. விழாவில், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். அந்த முன்னிலையில், பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சமத்துவ பொங்கலை கொண்டாடினர். விழாவில் துணை மேயர் வெற்றிச்செல்வன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு லோகு அவர்கள் பரிசுகளை வழங்கினார். இதில் பெரும்பாலான மக்களும் பங்கேற்றனர்.  ...
உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்:காமகோடி…

உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்:காமகோடி…

கோவை
கோவையில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் முனைவர் காமகோடி, இந்தியா வல்லரசாக மாறுவதற்காக நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது அவசியம் என குறிப்பிட்டார்.இந்த மாநாடு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர் இராமகிருஷ்ணா மடம் மற்றும் சுவாமி விவேகானந்தா கல்வி நிலையம் இணைந்து கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி தலைமை தாங்கினார்.மாநாட்டில், சுவாமி நரசிம்மானந்தா ஜி, விமுர்த்தானந்தா ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இளைஞர்கள் சமுதாய மாற்றத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும், சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கை மற்றும் அவரின் கருத்துக்களை நோக்கி சிறப்புரைகள் வழங்கப்பட்டன.அதன்பின், மெட்ராஸ் ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி,...
கோவை என்.ஜி.பி. கல்லூரியில் 24-வது ஆண்டு பட்டமளிப்பு விழா

கோவை என்.ஜி.பி. கல்லூரியில் 24-வது ஆண்டு பட்டமளிப்பு விழா

கோவை
கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழா என்.ஜி.பி. கலையரங்கில் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர், மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சா. சரவணன், கல்லூரியின் நடப்பு கல்வியாண்டின் ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கி, மாணவர்களுக்கு உறுதிமொழி எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினராக பேராசிரியர் எஸ். வின்சென்ட் கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் இளங்கலை 193, முதுகலை 390 மற்றும் முனைவர் பட்டம் 12, மொத்தம் 2305 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.நிகழ்ச்சியில் கோவை மருத்துவ மையத்தின் நிர்வாக அறங்காவலர் அருண் என். பழனிசாமி, என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் செயலர் ...