Tuesday, July 1

அரசியல்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உண்டியலில் கிடைத்த ஐபோன்: உரிமையாளர் கோரிக்கையை நிர்வாகம் மறுத்தது…

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உண்டியலில் கிடைத்த ஐபோன்: உரிமையாளர் கோரிக்கையை நிர்வாகம் மறுத்தது…

அரசியல்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள பிரசித்திபெற்ற கந்தசாமி கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் விலைமதிப்புள்ள ஐபோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. உரிமையாளர் அதனை திரும்ப பெற முயன்ற போதும், கோயில் நிர்வாகம் அதனை "முருகனுக்கு சொந்தமான காணிக்கை" என்று தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு பிறகு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி மற்றும் செயல் அலுவலர் குமரவேல் தலைமையில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில்,மொத்தம் ரூ.52 லட்சம் ரொக்கம்,289 கிராம் தங்கம்,6920 கிராம் வெள்ளி,தாலி, கண்மலர், வேல் போன்ற பொருட்களுடன் ஐபோனும் கண்டுபிடிக்கப்பட்டது.கண்டுபிடிக்கப்பட்ட ஐபோன் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டது. தினேஷ், அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தபோது, ...
உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ப்பு

உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ப்பு

அரசியல்
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு திருவிழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். விழா மேடையில் பேசிய உதயநிதி, "உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்மஸ் விழா" எனக் கூறி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். மேலும், தனது கல்வி வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடுகையில், "நான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி படிப்பு லயோலா கல்லூரி" என்று கூறி, "நானும் ஒரு கிறிஸ்துவன் என பெருமைப்படுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இது பல சங்கிகளை கோபப்படுத்தும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின், "அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன" என்று தெரிவித்தார். மேலும், "அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் பொய்யை மட்டுமே...
சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்: கள்ளச்சாராய தடுப்பில் தமிழக அரசு தோல்வி – பாமக ராமதாஸ் கருத்து…

சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்: கள்ளச்சாராய தடுப்பில் தமிழக அரசு தோல்வி – பாமக ராமதாஸ் கருத்து…

அரசியல்
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு முழுமையான செயல்பாடு காட்டவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த விவகாரத்துக்கு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக காவல்துறை மற்றும் மதுவிலக்கு பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கள்ளச்சாராய விற்பனையை அனுமதித்ததாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.கள்ளச்சாராய விற்பனையில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்ததாக பாமக நீண்ட காலமாக கூறி வந்தது. இதற்கு உறுதியாக, உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் இருப்பதாக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காவல்துறையினர் செயல்படவில்லை என்பதோடு, காவ...
அமித்ஷாவின் உரை: ‘முகத்திரையை கிழித்துக் கொண்டார்’ – திருமாவளவன் கடும் விமர்சனம்

அமித்ஷாவின் உரை: ‘முகத்திரையை கிழித்துக் கொண்டார்’ – திருமாவளவன் கடும் விமர்சனம்

அரசியல்
மக்களவையில் அம்பேத்கரைப் பற்றிப் பேசியதன் மூலம், தனது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்.அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற விவாதம் முக்கியச்செய்தியாக இருந்து வந்தது. அதன் நிறைவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த ஒன்றரை மணிநேர உரை, பல்வேறு தரப்பினரின் விமர்சனத்தையும் ஆதரவையும் எதிர்கொள்ளி வருகிறது.அந்த உரைக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.இந்த சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தனது எக்ஸ் பக்கத்தில், "புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து...
செம்மண் முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜர்…

செம்மண் முறைகேடு வழக்கில் அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜர்…

அரசியல்
சென்னை: 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் செம்மண் எடுப்பதற்கான அனுமதி வழங்கலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது, இதுகுறித்து பொன்முடி உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார், செம்மண் முறைகேடு வழக்கில் ரூ.28.36 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர்.இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள், பொன்முடி உட்பட அவருடைய உறவினர்களின் சொத்துகளில் ஏற்கனவே சோதனை நடத்தியிருந்தனர். மேலும், அவர் மீது விசாரணையும் மேற்கொண்டனர்.இந்தநிலையில், அமைச்சர் பொன்முடி இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். செம்மண் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி, தகவல்களை ...
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் பிரச்சனை குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து…

செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் பிரச்சனை குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து…

அரசியல்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை தொடர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (16-12-2024) செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் ஆய்வு செய்தார்.அவருடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது என கூறியதற்கு பலருக்கும் கோபம் வருகிறது. ஆனால், இது உண்மைதான். நமது சமுதாயத்தில் குப்பைகளை நிர்வகிக்கத் தெரியாத நிலைமை உள்ளது. குப்பைகள் எங்கே கொட்ட வேண்டும் என்பதில் மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை," என்றார்.அவர் தொடர்ந்து, "ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் குப்பைகள் கொட்டியதால், பாலாறு நதி மிகவும் மோசமாகிவிட்டது. மக்கள், செம்பரம்...
புஷ்பா 2 படத்தின் தொடர் சிக்கல்: அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…

புஷ்பா 2 படத்தின் தொடர் சிக்கல்: அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…

அரசியல், சினிமா - பொழுதுபோக்கு
பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி சம்பவம், திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கை சந்திக்க வைத்துள்ளது.கடந்த 5 ஆம் தேதி, புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் 12,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அளவுக்கு அதிகமான கூட்டம் குவிந்தது. ஒப்பனிங் ஷோவை காண அல்லு அர்ஜூன் நேரில் வருகை தந்தார்.இந்த கூட்ட நெரிசலின்போது, தில்சுக் நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி (39) என்பவர் தனது குடும்பத்துடன் படம் பார்க்க வந்தபோது மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.ரேவதியின் கணவர் புகாரின் பேரில், அல்லு அர்ஜூன், திரையரங்க மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குழுவினரைச் சேர்ந்தோரின் மீது ப...
ஃபென்ஜல் புயல் பாதிப்பு: நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஃபென்ஜல் புயல் பாதிப்பு: நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசியல்
ஃபென்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.புயலால் மிகுந்த பாதிப்புக்குள்ளான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2000 நிவாரணமாக வழங்கப்படும்.புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும்.வெள்ளத்தால் உயிரிழந்த எருது மற்றும் பசுக்களுக்கான இழப்பீடாக ரூ.37,500 வழங்கப்படும்.சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இந்த அறிவிப்புகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவேற்பாக உள்ளது. நிவாரண பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.    ...
வங்கதேசத்தில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு

வங்கதேசத்தில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு

அரசியல்
வங்கதேசத்தில் ஒளிப்பரப்பாகும் இந்திய தொலைக்காட்சி சேனல்களை தடை செய்ய வேண்டுமென அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இக்லாஸ் உத்தின் புயான் மனுத்தாக்கல் செய்துள்ளார்.மனுவில், இந்திய தொலைக்காட்சி சேனல்களால் வங்கதேசத்தின் சமுதாயத்திலும் கலாச்சாரத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் இந்திய சேனல்களை ஒளிப்பரப்பத் தடை விதிக்கச் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.இந்திய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் வங்கதேச கலாச்சாரத்திற்கு முரணாக இருப்பதாகவும், இளம் தலைமுறையினரை தீய பாதிப்புக்குள்ளாக்குகின்றன என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்த மனு வங்கதேச உயர் நீதிமன்ற நீதிபதி பாத்திமா நஜீப் மற்றும் நீதிபதி சிக்தர் மஹ்முதுர் ராஜி ஆகிய...
அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதால் பரபரப்பு

அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதால் பரபரப்பு

அரசியல்
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் தமிழக அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகி கரையை கடந்த ஃபென்ஜால் புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துள்ளது. இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன.பாதிப்புக்குள்ளாகிய அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்பட்டது.மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரும் அவரது மகன் கௌதமசிகாமணியும் மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால், அமைச்சர் தனது காரைவிட்டு இறங்காமல் மக்களுடன் பேசியது மக்...