தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரவு நேரங்களில் பெய்த மழை காரணமாக பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
மெயின் அருவியில் தண்ணீர் அதிகரித்து அபாய வளைவு வரை வந்ததால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாத நிலையில், அருவிகரையில் குடும்பத்துடன் நேரத்தை கழித்து, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், குற்றாலத்தில் நிலவும் இதமான சூழல் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. இதனால், சுற்றுலா துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.