Thursday, October 30

வன விலங்குகள் தண்ணீர் தேடி  அமராவதி அணைக்கு வருகை – வனத்துறையினர் எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை, வழக்கமாக மலைப்பகுதியில் கிடைக்கும் இயற்கை வளங்கள் மூலம் உணவும் தண்ணீரும் பெற்றுவருகின்றன.

இந்த நிலையில், கோடை வெப்பம் அதிகரித்ததால் வனப்பகுதிகளில் தண்ணீரின் அளவு குறைந்து உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதி அணை பகுதிக்குச் செல்லத் தொடங்கியுள்ளன.

விலங்குகள் அதிகம் காணப்படும் நேரம் அதிகமாக காலை மற்றும் மாலை நேரமாகும். குறிப்பாக, உடுமலை – மூணாறு சாலையை கடந்து விலங்குகள் அணைப்பகுதிக்குச் செல்கின்றன.

இதற்கிடையில், கோடை விடுமுறையை முன்னிட்டு மூணாறு நோக்கி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வனத்துறையினர் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

யானைகள் மிரட்சி அடையாத வகையில் கீழ்கண்ட நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது:

சாலையில் யானைகள் தெரிந்தால் அமைதியாக காத்திருக்க வேண்டும்.

யானைகள் மீது கற்கள் வீசுதல், சத்தம் எழுப்புதல் தவிர்க்கப்பட வேண்டும்.

செல்பி எடுக்க முயற்சி செய்யக்கூடாது.


மேலும், உடுமலை – மூணாறு சாலையின் மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க  திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *