Friday, April 25

போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு – அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் புதிய POSH (போஷ்) அழகு நிலையம் திறப்பு விழா அதன் நிறுவனர் நசிகா ரிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி நிறுவனத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் மு. பீர்முகமது, பகுதி துணை செயலாளர் சந்திரமோகன், மற்றும் திருச்சி மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பைசல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

POSH அழகு நிலையம் அதி நவீன தொழில்நுட்பத்துடன், சிறந்த வல்லுநர்களை கொண்டு ஃபேஸ் வாஷ், ஹேர் கட்டிங், திருமண அலங்காரம், ஹேர் டை உள்ளிட்ட பல்வேறு அழகு சேவைகளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குறைந்த செலவில் வழங்குகிறது.

போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு – அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!
 
இதையும் படிக்க  திருச்சி உறையூரில் 6ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *