
திருச்சி மாவட்டம், இருங்களூர் அருகே உள்ள புனித சவேரியார் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் தலைமையில் இந்த விழா நடைபெற்று, காலை ஒலிம்பிக் தீப ஒட்டம் நடைபெற்றது.


மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த விழாவில் மாணவ-மாணவிகள் நடமாடி உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் குடந்தை மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு பாக்கியசாமி, தொழிலதிபர் கிங்ஸ்லி ரூபன், கல்வி நிறுவனங்களின் தலைவர் சத்தியநாதன், சிடிசி மாநில தலைவி அமலோர் மேரி, பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

