Thursday, October 30

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை 11 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தது…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் யானை தெய்வானை (26) கடந்த 11 நாட்களுக்குப் பிறகு மண்டபத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.

நவம்பர் 18-ம் தேதி, தெய்வானை திடீரென ஆக்ரோஷமாகி உதவி பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலனை தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை 11 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தது...

சம்பவத்திற்குப் பிறகு, யானை வனம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தது. யானை பாகன்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் செந்தில் அதை குளிப்பாட்டி, உணவளித்து பார்த்து வந்தனர். யானையின் அருகே பக்தர்கள் செல்ல முடியாதவாறு போலீஸார் பாதுகாப்பு ஏற்கப்பட்டிருந்தனர்.

இயல்பு நிலைக்குத் திரும்பிய தெய்வானைக்கு நேற்று காலை ஆனந்த விலாச மண்டபத்தில் வேத விற்பன்னர்கள் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளை நடத்தினர். யாகத்திற்குப் பயன்படுத்திய புனித நீரை யானை மீதும், யானை தங்கியிருந்த மண்டபத்திலும் தெளித்து பரிகாரம் செய்தனர்.

பூஜைகள் முடிந்த பிறகு, 11 நாட்களுக்கு பிறகு, தெய்வானை யானை மண்டபத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது. வெளியே வந்த யானை சகஜமாக நடந்து, பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. யானையைப் பார்க்க ஆர்வமாக இருந்த பக்தர்கள் சந்தோஷம் தெரிவித்து, இதை வரவேற்றனர்.

இதையும் படிக்க  தமிழகத்தை நோக்கி புயல் சின்னம்... மழைக்கு வாய்ப்பு

திருச்செந்தூர் கோயிலின் யானை தெய்வானையின் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பியமை கோயில் நிர்வாகத்தையும் பக்தர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *