Thursday, October 30

“தண்ணீர் வழங்க கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை”

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் முனியாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததி இன பெண்கள், தங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த கிராமத்தில் சுமார் 40 அருந்ததி இனக் குடும்பங்கள் வாழ்கின்றனர். இங்கு குடிநீர் வழங்குவது மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வாக்கப்பட்ட வழியாகவே நடைபெறுகிறது. கடந்த காலத்தில் அந்த சாலையின் விரிவாக்கப் பணிகள் தொடங்கியபோது, குடியிருக்கும் பகுதிக்குச் செல்லும் குழாயின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடந்த ஒருமாதமாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று சுமார் 15 பெண்கள் தங்களுடன் காலிக்குடங்களுடன் சென்று, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உடனடி நடவடிக்கை எடுத்து தண்ணீர் விநியோகம் செய்ய கோரியும் மனு அளித்தனர்.

 
 
இதையும் படிக்க  116 கிராம் போலி நகையை அடகு வைத்து பணம் பெற முயன்ற மூவர் கைது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *