Thursday, June 26

ஆட்டோ விபத்தில் மூன்று மாணவிகள் காயம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளன. இந்த விபத்து சம்பவம் இன்று நடந்தது. சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி, பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், கிராமங்களில் இருந்து மாணவிகள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ மூலம் கல்லூரி செல்லுகின்றனர்.

இந்நிலையில், இன்று கல்லூரி முடிந்தபின் ஏழு மாணவிகள் ஷேர் ஆட்டோவின் மூலம் சிவகங்கை பேருந்து நிலையத்தை நோக்கி செல்லும் போது, வளைவு பகுதியில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் மூன்று மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டு, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

இந்த வழியில் பயணிக்கின்ற மாணவிகள், கடுமையான ஆபத்துகளைச் சந்தித்து வருகின்றனர். மாணவிகள், கல்லூரிக்கு வரும் வழியில் அரசு சார்பில் பேருந்து சேவை வழங்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
இதையும் படிக்க  "தண்ணீர் வழங்க கோரி பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *