சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக சென்னை மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் சத்திய பாமா தலைமையில் ராகிங் தடுப்பு குழு இன்று விசாரணை நடத்தியது. இதில், முதலாம் ஆண்டு மாணவர்களை நேரில் அழைத்து கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களின் வாக்குமூலங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ராகிங் சம்பவங்களை மூடிமறைக்க முயற்சி செய்கின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.