Saturday, June 28

நக்சா திட்டம் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நகர்ப்புற வாழ்விடங்களுக்கான தேசிய புவிசார் அறிவியல் ரீதியான நில அளவை (நக்சா) திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டுகளில் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள நகர்ப்புற வாழ்விடங்களுக்கான தேசிய புவிசார் அறிவியல் ரீதியான நில அளவை (நக்சா) திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தொடங்கிவைத்தார்.

நக்சா நில அளவை திட்டம் மூலம் அளில்லா வானூர்திகளை (Drone) பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு புல வரைபடங்கள் உருவாக்கப்படும். இந்த முறையின் மூலம் சொத்து வரி வசூல் எளிமையாகும். மேலும், புவி அமைவிட புள்ளிகளுடன் கூடிய வரைபடங்கள் மற்றும் சொத்து வரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில அளவைகள் நில உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜார்கண்டில் நடைபெறும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக கைபந்தாட்ட வீரர்கள், அணி தலைவர் மாத்தூர் பாண்டி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 
இதையும் படிக்க  "டேங்கர் லாரி விபத்து: ஒருவர் பலி,ஓட்டுநர் மாயம்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *