Saturday, June 28

பெண் SI தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் பெண் எஸ்.ஐ. பிரணிதா, இடத்தில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்தார்.

நேற்று இரவு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் மற்றும் அவரது குழுவினர் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு வந்தபோது, பெண் எஸ்.ஐ. உடன் தகராறு ஏற்பட்டது. இதில், எஸ்.ஐ. பிரணிதா காயமடைந்து, தற்போது காரைக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகியால் பெண் உதவி ஆய்வாளரை தாக்கியதாக பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

 
இதையும் படிக்க  மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகார்: விசாரணை மேற்கொண்ட குழு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *