Saturday, June 28

லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது…

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ1500 லஞ்சம் பெற்ற மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் தனது வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக இளையான்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில், அங்கு பணியாற்றும் உதவி செயற்பொறியாளர் சிவகுமார், பெயர் மாற்றத்திற்காக ரூ1500 லஞ்சம் கேட்டார். இதை ஒப்புக்கொள்ள மறுத்த ரமேஷ், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதலின்படி, ரமேஷ் பணத்தை ரசாயனம் தடவி 1500 ரூபாயுடன் இளையான்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் சிவகுமாரிடம் வழங்கினான். இதற்கிடையே, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவகுமார் மீது சோதனை நடத்தி, கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இதையும் படிக்க  சாலை பணியாளர்கள் கருப்பு துணி அணிந்து ஒப்பாரி போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *