சிவகங்கையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், “கொத்தடிமை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பொது மக்களுக்கிடையே கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.