Friday, June 27

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது

பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறியல் அறப்போராட்டம் நடைபெற்றது. இதில், ஆந்திரா போன்ற மாநிலங்களின் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்திற்கு 6000 ரூபாயும், கடும் ஊனத்திற்கு 10,000 ரூபாயும் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், மற்றும் நான்கு மணி நேர இலகுவான வேலை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோஷமிட்டு ஈடுபட்டனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது
மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது
மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது
மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது
 
 
இதையும் படிக்க  பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *