Saturday, June 28

சீட்டு மோசடி: மூன்று கோடியை ஏமாற்றிய பெண்…..

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டியில், சுமார் 200க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள், தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு மற்றும் பண்டிகை சீட்டுகள் உள்ளிட்ட வணிகங்களில் பணம் செலுத்தி, பரிதாபமாக மோசடியில் ஆழ்ந்து போயுள்ளனர்.

சீட்டு மோசடி: மூன்று கோடியை ஏமாற்றிய பெண்.....
சீட்டு மோசடி: மூன்று கோடியை ஏமாற்றிய பெண்.....

இப்பகுதியில் வசித்து வந்த ஜெயந்தி என்ற பெண், “திரிபுவனம்” என்ற சீட்டு கம்பெனியின்கீழ் கடந்த சில வருடங்களாக இந்த மோசடியை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சேகரித்த பணம், தவணையாக ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சீட்டின் முடிவுக்கு பிறகு, 4 மாதங்கள் கடந்தும் பணம் திருப்பி வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீட்டு மோசடி: மூன்று கோடியை ஏமாற்றிய பெண்.....

இந்த சம்பவம் குறித்து பலமுறை வாதிடப்பட்டு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று பாதிக்கப்பட்ட  குடும்பங்கள், கோவை மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை செய்து, சம்பந்தப்பட்ட ஜெயந்தியை விரைவில் கைது செய்து, அவர்களுடைய பணம் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மொத்தம் மூன்று கோடியே மேல் பணம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் ஜெயந்தி, தற்போது மர்மமாக காணப்படுகின்றார்.

இதையும் படிக்க  மாசாணியம்மன் கோவிலில் பாரதி வள்ளி ஒயில் கும்மி குழுவின் சிறப்பான அரங்கேற்றம்
சீட்டு மோசடி: மூன்று கோடியை ஏமாற்றிய பெண்.....
சீட்டு மோசடி: மூன்று கோடியை ஏமாற்றிய பெண்.....
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *