Friday, June 27

யானை தாக்கியதில் ஜெர்மன் சுற்றுலா பயணி உயிரிழப்பு…

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வாட்டர் ஃபால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு பகுதியில், ஒற்றைக்காட்டு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து, வனத்துறையினர் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தலை வழங்கினார்கள். இப்போது, இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 77 வயதான மைக்கேல் ஜூர்சன், வால்பாறை சென்று பொள்ளாச்சி செல்லும் போது, சாலையை கடக்க முயற்சித்தார்.

இப்போது, வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கைகள் தெரிவித்தபோதும், அவர் எச்சரிக்கையை மீறி சாலையை கடக்க முயற்சித்தார். அந்தவேளையில், யானை அவரை தாக்கி கீழே வீசிவிட்டது. மைக்கேல் ஜூர்சன் எழுந்து சுயநினைவுடன் நகர்ந்த பிறகு, யானை மீண்டும் பலமாக தாக்கி, பலத்த காயங்களுடன் கிடப்பதை கண்ட வனத்துறையினர், அவரை அருகிலுள்ள வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

முதற்கட்ட சிகிச்சையின்பின், அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்த சம்பவம் அருகிலிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி மனதை பதபதக்க வைக்கின்றது.

 
இதையும் படிக்க  15ஆவது தேசிய வாக்காளர் தினம்: கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *