Thursday, October 30

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் கண்காட்சி தொடக்கம்!

கோவை ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் கண்காட்சி மிகப்பெரிய வரவேற்புடன் துவங்கியது. இந்த கண்காட்சியை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தென் மண்டல துணை தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ மதன் குமார் ரெட்டி துவக்கி வைத்தார்.

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் கண்காட்சி தொடக்கம்!

இந்த கண்காட்சி டிசம்பர் 26 முதல் ஜனவரி 5 வரை 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் தரமான கதர் துணிகள், மஸ்லின் காதி, காஞ்சிபுரம் பட்டு புடவைகள், காந்தி கிராம் காட்டன் புடவைகள், புளியம்பட்டி லூங்கி, குப்படம் தோட்டிகள், ஆயுர்வேத பொருட்கள், மண்பாண்டங்கள், தோல் பொருட்கள், தஞ்சாவூர் பொம்மைகள், கல் சிற்பங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியின் போது பேசிய ஸ்ரீ மதன் குமார் ரெட்டி, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறையில் தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். 2023-24 நிதியாண்டில் தமிழ்நாட்டில் 74 சுதர் நிறுவனங்கள் மூலம் 11,872 கைவினைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க  TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி...
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் கண்காட்சி தொடக்கம்!

ஜனவரி 3 அன்று பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கதர் பேஷன் ஷோ நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கனரா வங்கி துணை பொது மேலாளர் ஸ்ரீதர், மாநில இயக்குநர் சுரேஷ், துணை இயக்குநர் வாசிராஜன், உதவி இயக்குநர் சித்தார்தன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் கண்காட்சி தொடக்கம்!

இந்த கண்காட்சி கைவினைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாக அமைந்துள்ளது. அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பார்வையிடுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் கண்காட்சி தொடக்கம்!
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *