Thursday, October 30

புதுச்சேரியில் மதுபான கடையில் திருட்டு: 3 பேர் கைது!

புதுச்சேரி சின்ன சுப்ராய பிள்ளை வீதியில் உள்ள மதுபான கடையில் 7ம் தேதி இரவில் திருட்டு நடந்துள்ளது. கடையின் காசாளர் பிரேம்குமார், வியாபாரத்தை முடித்து பணத்தை கல்லா பெட்டியில் வைத்து கடையை பூட்டி சென்றார். ஆனால், 8ம் தேதி காலை கடை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு, கல்லா பெட்டியில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணம் திருட்டாகி இருந்தது. இந்நிலையில், பிரேம்குமார் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், மர்ம நபர்கள் பாரதி வீதியில் உள்ள ஒரு ஸ்டூடியோ மற்றும் 5 கடைகளின் ஷட்டர்களை உடைக்க முயன்றதாக தெரியவந்தது. அதன் பின்னர், திருச்சியை சேர்ந்த திருட்டு கும்பல் இந்த குற்றத்தைச் செய்திருப்பதாக ஆய்வு முடிவுக்கிடைபட்டது.

போலீசார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து திருச்சிக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த குற்றவாளிகளை கைது செய்து, சச்சின் (எ) சஞ்சய் (24) மற்றும் அவருடன் இருந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து பணம், செல்போன், இயர்பட்ஸ் மற்றும் இரும்பு தடி பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சச்சின் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, மற்ற 2 சிறுவர்கள் அரியாங்குப்பம் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

 
இதையும் படிக்க  மணவெளியில் கால்நடை மலட்டுத்தன்மை நீக்க சிறப்பு முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *