Saturday, June 28

அதிமுக செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரிக்கை

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், இந்தியாவிலுள்ள மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு நடைமுறையைத் தொடர்ந்து, மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்கள் மாநில இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த 29-01-2025 அன்று உச்சநீதிமன்றம், சிவில் அப்பீல் எண்.9289/2019 மற்றும் WRIT PETITION (C) NO.1183/2020 வழக்குகளின் தீர்ப்பில், மாநில ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை அரசியல் அமைப்பு சட்டப்படி அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக, மாநிலங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அகில இந்திய அளவில் இடங்கள் நிரப்பப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு, புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் மாணவர்களை முழுமையாக பாதிக்கும் என்பதால், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்த 370 முதுநிலை இடங்கள் இருந்தாலும், அவற்றில் 50% இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்கப்படுவதை எதிர்கொள்ளும் பிரச்சினை உருவாகியுள்ளது.

அதிமுக செயலாளர், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், மாநில கழகப் பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப்பேரவை செயலாளர் பாப்பசாமி, மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிரபாகரன் மற்றும் பல மருத்துவர்கள் உடனிருந்தனர்.

 
இதையும் படிக்க  மாநில நிர்வாகிகள் கூட்டம்....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *