Tuesday, April 15

புஷ்பா 2 படத்தின் தொடர் சிக்கல்: அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…

பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி சம்பவம், திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கை சந்திக்க வைத்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி, புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் 12,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அளவுக்கு அதிகமான கூட்டம் குவிந்தது. ஒப்பனிங் ஷோவை காண அல்லு அர்ஜூன் நேரில் வருகை தந்தார்.

இந்த கூட்ட நெரிசலின்போது, தில்சுக் நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி (39) என்பவர் தனது குடும்பத்துடன் படம் பார்க்க வந்தபோது மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ரேவதியின் கணவர் புகாரின் பேரில், அல்லு அர்ஜூன், திரையரங்க மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குழுவினரைச் சேர்ந்தோரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிஎன்எஸ் சட்டத்தின் 105, 118(1) r/w3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

நீண்ட நாள் விசாரணைக்கு பிறகு, இன்று சிக்காட்பள்ளி போலீசார், அல்லு அர்ஜூனை அவரது வீட்டில் இருந்து கைது செய்தனர். கைதுக்கு முன்னதாக, அல்லு அர்ஜூன் தனது மனைவி சினேகா ரெட்டியை கட்டியணைத்து, உணர்ச்சிப் பூர்வமாக வழியனுப்பினார்.

சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலானது. கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது.

இந்த சம்பவம் திரையரங்குகளில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, பிரபல நடிகர்கள் பங்கெடுக்கும் நிகழ்வுகள் மீது சீரிய உள்கண்ணோட்டம் தேவை என்பதைப் புரியவைத்துள்ளது.

இதையும் படிக்க  சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்: கள்ளச்சாராய தடுப்பில் தமிழக அரசு தோல்வி - பாமக ராமதாஸ் கருத்து...

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *