Monday, June 30

சிவகங்கை

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 7 பேர் கைது…

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 நபர்களை காவல்துறையினர் கைது செய்து, மகளிர் காவல் நிலையத்தில் இரு நாட்களாக ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தைகள் நல குழு சார்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில் "எதாவது தவறுதலாக நடந்துள்ளதா?" என்று கேட்கும்போது, நான்கு மாணவிகள் தங்களது பயணம் செய்தபோது சிலர் அவர்களை தவறாக தொட்டதாகவும், முத்தம் கொடுத்ததாகவும், பலவிதமான பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டதாக கூறினார்கள். இந்த புகாரின் பிறகு, மாணவிகளின் பெற்றோர்கள் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர் மற்றும் சம்பந்தப்பட்ட 7 நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்தபின், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண...
லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது…

லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது…

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ1500 லஞ்சம் பெற்ற மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் தனது வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக இளையான்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில், அங்கு பணியாற்றும் உதவி செயற்பொறியாளர் சிவகுமார், பெயர் மாற்றத்திற்காக ரூ1500 லஞ்சம் கேட்டார். இதை ஒப்புக்கொள்ள மறுத்த ரமேஷ், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதலின்படி, ரமேஷ் பணத்தை ரசாயனம் தடவி 1500 ரூபாயுடன் இளையான்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் சிவகுமாரிடம் வழங்கினான். இதற்கிடையே, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவகுமார் மீது சோதனை நடத்தி, கையும் களவுமாக கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட...
மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிய வாகனம் கவிழ்ந்து விபத்து!

மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிய வாகனம் கவிழ்ந்து விபத்து!

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கிருங்காங்கோட்டை கிராமத்துக்கு அருகே மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகனம் கவிழ்ந்தவுடன் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் சரக்குகள் நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தன, இதனால் சாலையில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே வாகனங்கள் செல்வதற்கு வழி எட்டியது.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அந்த வாகனத்தில் பண்டல் பண்டலாக காய்ந்த இலைகள் ஏற்றிவந்ததை கண்டறிந்தனர். முதல் கட்ட விசாரணையில், இவை பீடி சுத்த பயன்படுத்தப்படும் புகையிலைப் பொருட்கள் என்று தகவல்கள் வெளியாகின. எனினும், இந்த இலைகள் உயர் ரக போதைப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் இலைகளா என்பது தொடர்பாக போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.தற்போது, ராட்சச கிரேன்களை பயன்படுத்தி விபத்துக்குள்ளான வாகனம் மீட்டு, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப...

தேவபட்டு கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்குபற்றும் பாரம்பரிய பொங்கல் விழா

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் அமைந்த தேவபட்டு கிராமத்தில், ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு பிறகு அந்தரநாச்சியம்மன் கோவிலில் நன்றி கூறும் விதமாக செவ்வாய் பொங்கல் வைத்து, வழிபாடு மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெறும் பாரம்பரிய விழா இன்று நடைபெறுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இந்த பாரம்பரிய விழாவில், பெண்கள் பங்குபற்றாமல், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.இந்தப் பாரம்பரியத்தில், தேவபட்டு கிராமத்தின் ஆண்கள் மண்பானைகள் மற்றும் காய்கறிகளை கொண்டு ஊர்வலமாக மணிமுத்தாறு ஆற்றை சென்று, அங்கு ஊற்று தோண்டி பனை ஓலையில் தண்ணீர் எடுத்து, மண்பானையை நிரப்பி அந்தரநாச்சியம்மன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவர்.விழாவின் பின், கிராமத்தின் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசையாக வந்து மஞ்சுவிரட்டு மாடுகளுக்கு மரியாதை செலுத்துவார்கள். கிராம மக்கள் இந்த பாரம்பரிய விழாவை கால்நடைகள், விவசாயம் மற...
35 லட்சம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

35 லட்சம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் முகமது அசாருதீன் வீட்டில் இருந்து ரூ. 35 லட்சம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, முன்னாள் மாவட்ட செயலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சிவகங்கை டி.எஸ்.பி. அமலா அட்வின் தலைமையிலான போலீசார், இளையான்குடி சாலையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்கிடமான பதில்களை அளித்த வாகனத்தில் பயங்கர ஆயுதங்களை பிடித்து, ஆறு பேரை கைது செய்தனர். அவர்கள் கூறிய தகவலின் பேரில், அசாருதீன் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, 35 லட்சம் மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  ...

மாநகராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்!

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியுடன் சங்கராபுரம், அரியக்குடி, இழுப்பக்குடி, கோவிலூர், மானகிரி உள்ளிட்ட 5 ஊராட்சிகள் மற்றும் கோட்டையூர், கண்டனூர் என்ற பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டதை எதிர்த்து, திருப்பத்தூர் தாலுகாவுக்குட்பட்ட தளக்காவூர் மற்றும் கீரணிப்பட்டி கிராமங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஊராட்சிகளை காரைக்குடி மாநகராட்சியுடன் இணைத்த அறிவிப்பின் பிறகு, கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 நாள் வேலை வாய்ப்பு மற்றும் மற்ற தகுந்த நடவடிக்கைகள் கோரி போராட்டம் நடத்தினார்கள்.போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள், காரைக்குடி-மானகிரி-திருப்பத்தூர் வழி செல்லும் சாலையில் அமர்ந்து போக்குவரத்தினை மறுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலை வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியாபுரம...

பெண் தூக்கிட்டு உயிரிழப்பு; உறவினர்கள் மறியல் போராட்டம்

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் திருமணம் ஆன பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள், தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் கரிசல்குளத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் சந்தியா 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சில நேரங்களில், கணவன் மது அருந்தி வந்து மனைவி சந்தியாவிடமிருந்து நகைகள் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று, நகைகளை கேட்டு நடந்த தகராறில் அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து விட்டனர். ஆனால், பின்னர் சந்தியா வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், 10 வயதான அவரது மூத்த பிள்ளை தினசூரியன்...
நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து; குடியிருப்பு வாசிகள் அவதி….

நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து; குடியிருப்பு வாசிகள் அவதி….

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட காளவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வின்னை முட்டும் அளவிற்கு புகை கிழம்பி, குடியிருப்பு வாசிகள் மூச்சுத்திணறல் அனுபவிக்க நேரிட்டனர்.நகராட்சி 8வது வார்டுக்குட்பட்ட இந்த பகுதி, குப்பை கிடங்கு மற்றும் அருகிலுள்ள நகராட்சி பள்ளி, ரேசன் மண்ணெண்ணை பல்கும் ஆகியவை உள்ள இடமாக விளங்குகிறது. சமீப காலமாக, அந்த குப்பை கிடங்கின் அருகே சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைத்து செல்வதால், பல முறை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.இந்த தீ விபத்து மாலையில் ஏற்பட்டது. தீயினால் புகை கிழம்பி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அவதியில் ஆழ்ந்தனர். தீயனைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டதும், இரண்டு மணி நேரம் தீயை அணைக்க போராடிய பின்னரே, தீயனைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முடிந்ததால், தண்ணீர் நிரப்பிக...
ஆட்டோ விபத்தில் மூன்று மாணவிகள் காயம்

ஆட்டோ விபத்தில் மூன்று மாணவிகள் காயம்

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளன. இந்த விபத்து சம்பவம் இன்று நடந்தது. சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி, பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், கிராமங்களில் இருந்து மாணவிகள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ மூலம் கல்லூரி செல்லுகின்றனர்.இந்நிலையில், இன்று கல்லூரி முடிந்தபின் ஏழு மாணவிகள் ஷேர் ஆட்டோவின் மூலம் சிவகங்கை பேருந்து நிலையத்தை நோக்கி செல்லும் போது, வளைவு பகுதியில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் மூன்று மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டு, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.இந்த வழியில் பயணிக்கின்ற மாணவிகள், ...
நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி!

நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி!

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.இந்த புத்தக கண்காட்சியில், சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக்ஸ் இணைந்து 10க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் தமிழ், இலக்கியம், வரலாறு, சட்டம், பொது அறிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தின. வழக்கறிஞர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை பார்த்து வாசித்து வாங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை ஏற்றார்.  ...