Sunday, August 3

தமிழ்நாடு

பெண் தூக்கிட்டு உயிரிழப்பு; உறவினர்கள் மறியல் போராட்டம்

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் திருமணம் ஆன பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள், தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் கரிசல்குளத்தைச் சேர்ந்த கருப்பையா மகள் சந்தியா 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சில நேரங்களில், கணவன் மது அருந்தி வந்து மனைவி சந்தியாவிடமிருந்து நகைகள் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று, நகைகளை கேட்டு நடந்த தகராறில் அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து விட்டனர். ஆனால், பின்னர் சந்தியா வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், 10 வயதான அவரது மூத்த பிள்ளை தினசூரியன்...
மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தை பாதுகாக்க விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தை பாதுகாக்க விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை பாதுகாக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பு நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் கே.ஏ. பட்டீஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட பயனாளிகளுக்கு நிலுவையில் உள்ள இரண்டரை மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்,மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் 100 நாட்கள் வேலை அளவு 200 நாட்களாக உயர்த்த வேண்டும், ஒவ்வொரு பயனாளிக்கும் 600 ரூபாய் தின ஊதியம் வழங்க வேண்டும்,மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான ரூபாய் 2,20,000 கோடி ஒதுக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளில...
புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய போராட்டம்

திருச்சி
திருச்சியில் இன்று தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய கோரி மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம், திருச்சி மாவட்ட ராக்சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபர் அசோசியேஷன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் சேகர், மாநில துணைத் தலைவர் அழகு, மாநில துணைப் பொருளாளர் டேவிட், மாநில முதன்மை செயலாளர் தமிழரசன், மாநில இணைச்செயலாளர் ஷாஜகான், மாநில பொதுச் செயலாளர் ஜமால் முகமது மற்றும் பல முன்னணி உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்து பழைய நடைம...
2 நாள்களில் ரூ.1.16 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

2 நாள்களில் ரூ.1.16 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களில் ரூபாய் 1 கோடி 16 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவங்களுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி விமான நிலையத்தில் மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருவதாகும். இங்கு வெளிநாடுகளிலிருந்து தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் பொருட்கள் கடத்தும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகின்றன.இந்த கடத்தலைத் தடுக்க சுங்கத்துறை மற்றும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சிக்கு வந்த பயணியொருவர் 1141 கிராம் எடை கொண்ட பசை வடிவிலான தங்கத்தை கடத்தி வந்ததாக பரிசோதனையில் தெரியவந்தது. அதன் மதிப்பு ₹94.53 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பான விசாரணைகள் ...
நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து; குடியிருப்பு வாசிகள் அவதி….

நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து; குடியிருப்பு வாசிகள் அவதி….

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட காளவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வின்னை முட்டும் அளவிற்கு புகை கிழம்பி, குடியிருப்பு வாசிகள் மூச்சுத்திணறல் அனுபவிக்க நேரிட்டனர்.நகராட்சி 8வது வார்டுக்குட்பட்ட இந்த பகுதி, குப்பை கிடங்கு மற்றும் அருகிலுள்ள நகராட்சி பள்ளி, ரேசன் மண்ணெண்ணை பல்கும் ஆகியவை உள்ள இடமாக விளங்குகிறது. சமீப காலமாக, அந்த குப்பை கிடங்கின் அருகே சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைத்து செல்வதால், பல முறை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.இந்த தீ விபத்து மாலையில் ஏற்பட்டது. தீயினால் புகை கிழம்பி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அவதியில் ஆழ்ந்தனர். தீயனைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டதும், இரண்டு மணி நேரம் தீயை அணைக்க போராடிய பின்னரே, தீயனைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முடிந்ததால், தண்ணீர் நிரப்பிக...
ஆட்டோ விபத்தில் மூன்று மாணவிகள் காயம்

ஆட்டோ விபத்தில் மூன்று மாணவிகள் காயம்

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளன. இந்த விபத்து சம்பவம் இன்று நடந்தது. சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி, பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், கிராமங்களில் இருந்து மாணவிகள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ மூலம் கல்லூரி செல்லுகின்றனர்.இந்நிலையில், இன்று கல்லூரி முடிந்தபின் ஏழு மாணவிகள் ஷேர் ஆட்டோவின் மூலம் சிவகங்கை பேருந்து நிலையத்தை நோக்கி செல்லும் போது, வளைவு பகுதியில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் மூன்று மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டு, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.இந்த வழியில் பயணிக்கின்ற மாணவிகள், ...
இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்

இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்

திருச்சி
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார், பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.இதன்பிறகு, பொதுமக்கள் போராட்டத்தை முடித்து இடத்தை விட்டு செல்வதுடன், அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.    ...
நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி!

நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி!

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.இந்த புத்தக கண்காட்சியில், சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக்ஸ் இணைந்து 10க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் தமிழ், இலக்கியம், வரலாறு, சட்டம், பொது அறிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தின. வழக்கறிஞர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை பார்த்து வாசித்து வாங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை ஏற்றார்.  ...
புனித சவேரியார் பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு பரிசளிப்பு

புனித சவேரியார் பள்ளியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு பரிசளிப்பு

திருச்சி
திருச்சி மாவட்டம், இருங்களூர் அருகே உள்ள புனித சவேரியார் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கதிரவன் தலைமையில் இந்த விழா நடைபெற்று, காலை ஒலிம்பிக் தீப ஒட்டம் நடைபெற்றது. மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த விழாவில் மாணவ-மாணவிகள் நடமாடி உற்சாகத்தை ஏற்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் குடந்தை மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு பாக்கியசாமி, தொழிலதிபர் கிங்ஸ்லி ரூபன், கல்வி நிறுவனங்களின் தலைவர் சத்தியநாதன், சிடிசி மாநில தலைவி அமலோர் மேரி, பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ...
ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 75 அடி உயர கொடி மரம் ஏற்றப்பட்டது.

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 75 அடி உயர கொடி மரம் ஏற்றப்பட்டது.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 75 அடி உயரமான கொடி மரம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.மாசாணி அம்மன் கோவிலின் குண்டம் திருவிழா 18 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முக்கியமான நிகழ்வு, மயான பூஜை, வரும் 12ம் தேதி அருகிலுள்ள மயானத்தில் நடைபெறும். அதன் பிறகு, 13ம் தேதி இரவு குண்டம் பூ வளர்க்கப்பட்டு, 14ம் தேதி காலை 7 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்வு கண்டு கொள்ளப்படும். இந்த திருவிழாவை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை அன்று, 75 அடி உயரமான கொடி மரம் சர்க்கார்பதிவிலிருந்து மாசாணி அம்மன் முறைதாரர்கள் மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், இன்று காலை உப்பாறு கரையோரம் பூஜைகள் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொடி மரம் மாசாணி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் "மாசாணி தாயே போற்றி" என்ற ஒப்பணியில் மேள தாளங்களின் முழக்க...