Saturday, August 2

தமிழ்நாடு

பள்ளி வேன் மோதி கூலித் தொழிலாளி இருவர் உயிரிழப்பு

தமிழ்நாடு
தேவகோட்டை அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த வேன், இருசக்கர வாகனத்தை மோதியதில் கூலித் தொழிலாளி இருவர் உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.கண்ணங்குடியில் இருந்து தேவகோட்டைக்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற வேன், சிறுவாச்சி சாலை ஞான ஒளிபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதி விபத்திற்குள்ளானது.இந்த இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (37), பழனி (45), பிரகாஷ் (30) ஆகியோர் பயணம் செய்தனர். வேன் மோதியதில் முத்துகிருஷ்ணன் மற்றும் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.பிரகாஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், அப்பகுதி கிராம மக்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்து தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கெளதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு...

காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு!

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் பேக்கரி (பெஸ்ட் மம்மி) ஒன்று, காதலர் தினத்தையொட்டி, தங்களிடம் வரும் காதல் ஜோடிகளுக்கு ரோசாப்பூ வழங்கும் சிறப்பு ஆஃபரை அறிவித்தது. இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில், உறுப்பினர்கள் தாலிக்கயிறுடன் பேக்கரிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார், பேக்கரி நிர்வாகத்துடன் பேசி, அவர்களின் காதலர் தின ஆஃபரை ரத்து செய்யச் செய்தனர். அதன்பிறகு, பேக்கரி நிறுவனம் தங்களது விளம்பர பலகையையும் அகற்றியது.இந்த சம்பவம் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.  ...
ஆசியா நகை கண்காட்சி…

ஆசியா நகை கண்காட்சி…

கோவை
கோவை பந்தய சாலையில் உள்ள விவாண்டா ஹோட்டலில் பிப்ரவரி 7, 8, மற்றும் 9ஆம் தேதிகளில் தென்னிந்தியாவின் பிரபலமான ஆசியா ஜூவல்ஸ் ஷோ 2025 அதன் 52வது பதிப்பை விமரிசையாக தொடங்கியுள்ளது. இந்த பிரமாண்டமான நகை கண்காட்சியில், இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகைக்கடைக்காரர்கள் அவர்களின் சிறந்த நகை வடிவமைப்புகளை ஒரே இடத்தில் வெளிப்படுத்துகின்றனர். கண்காட்சி மற்றும் விற்பனை நேரம் தினமும் காலை 10.30 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறும். ஆசியா ஜூவல்ஸ் ஷோ 2025 இன் தொடக்க விழாவில் வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர் ராஜேஷ் லுண்ட் (ICICIJ தலைவர்), ஜூவல்லரி கியூரேட்டர் சங்கீதா பீட்டர், P & S குழும நிறுவனங்களின் நிறுவனர் பிரியங்கா சுந்தர், ஹெல்த் பேசிக்ஸ் & கோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வாதி ரோஹித், தாஜ் ஜிட்டோ பெண்கள் பிரிவுத் தலைவர் ரீனா கோத்தாரி, திருமதி உலக அழகி...
புதிய ஆட்சியராக பவன்குமார் பொறுப்பேற்பு…

புதிய ஆட்சியராக பவன்குமார் பொறுப்பேற்பு…

கோவை
கோவை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் பதவியேற்றுள்ளார். கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த அவர், பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர்.2016 ஆம் ஆண்டில் தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அவர் இதற்கு முன் திருவள்ளூர், நாகர்கோவில், தாராபுரம், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் அரசு இணைச் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தற்போது தமிழ்நாடு திறந்த மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  ...
பெண் கல்விக்கு ஊக்கமளிக்கும் புதிய வெண்கல சிலை!

பெண் கல்விக்கு ஊக்கமளிக்கும் புதிய வெண்கல சிலை!

கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள ரவுண்டானாவில், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. புத்தகப்பை சுமந்தபடி, புத்தகங்களின் மீது ஏறி உலக உருண்டையை நோக்கி செல்லும் குழந்தை உருவில் அமைக்கப்பட்ட இந்த சிலை, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த சிறப்பான விழிப்புணர்வு சிலையை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வருவாய் அலுவலர் சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இந்த சிலையை உருவாக்கிய அடிசியா நிறுவனத்தின் தலைவர் மணிகண்டன், "பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட இதை நிறுவியுள்ளோம். கல்வியால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றம் ஏ...
அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆய்வு…

அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆய்வு…

திருச்சி
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், 21-வது வார்டின் நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், சாக்கடை கால்வாயில் தேங்கிய குப்பைகள் பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. துர்நாற்றம் வீசுவதோடு, இந்த நிலை சுகாதார சீர்கேட்டுக்கும், நோய் தொற்று அபாயத்திற்கும் காரணமாக உள்ளது. இதை தீர்க்க தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அமமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மாநகராட்சியின் அலட்சியமே இந்த சாக்கடை பிரச்சனைக்கு காரணம் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்றும் எச்சரித்தார்.இந்...
₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

₹8.86 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மொத்தம் 793 பயனாளிகளுக்கு ₹8.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மக்கள் தொடர்பு முகாம் பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் உள்ள மின்னல் திருமண மண்டபத்தில், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்காக நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்தூர் சாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை, வேளாண்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில்;இலவச வீட்டுமனை பட்டா,விலையில்லா சலவைப் பெட்டி,வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பேச்சுகையில் மக்கள் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் பணியாற்றி வருவதை பாராட்டி...
பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த பெண் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (SI) பணிபுரிந்து வந்த பிரணிதா, தனது மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய்யான புகார் அளித்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பணியிடை நீக்கப்பட்டுள்ளார்.நிகழ்வின் முன்னணி விவரங்கள்:பிப்ரவரி 5ஆம் தேதி இரவு, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மாவட்ட நிர்வாகி உட்பட சிலர், புகார் மனு தொடர்பாக சோமநாதபுரம் காவல் நிலையம் வந்தனர்.அப்போது, பிரணிதா மற்றும் விசிக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர், தன்னை அவர்கள் தாக்கியதாக பிரணிதா புகார் அளித்தார்.விசாரணையின் முடிவில்,காவல்துறையின் ஆழமான விசாரணையில், பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் தவறானது என சிவகங்கை மாவட்ட காவல்துறை உறுதி செய்தது.சிசிடிவி காட்சிகள் மற்றும் மருத்துவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்றதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என ...
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை…

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மயான பூஜை…

கோவை
கோவை மாவட்டத்தில் சிறப்புமிக்க அம்மன் கோயில்களில் ஒன்றான ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய அங்கமான மயான பூஜை நள்ளிரவில் மிகுந்த பக்திபரவசத்தில் நடத்தப்பட்டது. மயான பூஜையின் முக்கிய நிகழ்வுகள்:மாசாணியம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20க்கும் மேற்பட்ட அருளாளிகள், அம்மனின் சூலம் தாங்கி ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு பம்பை இசையின் முழக்கத்துடன் சென்றனர்.மண்ணால் உருவாக்கப்பட்ட மயான தேவதையின் சயன கோலத்தை மறைத்திருந்த திரை நள்ளிரவு 2 மணிக்கு விலக்கப்பட்டது.அருளாளி அருண், அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியவாறு பம்பை இசையின் சத்தத்தில் நடனம் ஆடினார். பின்னர் பட்டுசேலையில் பிடி மண்ணை எடுத்தார், இதனுடன்...
மணியாச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

மணியாச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள கருமாண்டக் கவுண்டனூர் பகுதியில், சுயம்புவாக உருவான மணியாச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்பகுதி பொதுமக்கள் எப்போதும் அம்மனை வழிபட்டு, தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதை கண்டுள்ளனர். இதனால், அதிகமான பக்தர்கள் வந்து பூஜைகள் செய்து வழிபட்டனர். மணியாச்சி அம்மனுக்கு கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஊர்பொதுமக்கள் முடிவெடுத்தனர், பின்னர் அந்தத் திட்டத்திற்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முழுமையாக முடிந்ததும், கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இன்று காலை மணியாச்சி அம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.இதேபோல், கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் கோபுர கலசங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆய...