Friday, August 1

தமிழ்நாடு

பள்ளி வாகன ஓட்டுநர் கைது!

பள்ளி வாகன ஓட்டுநர் கைது!

திருச்சி
புதுச்சேரியில் வேனில் சென்றுவந்த அரசு பள்ளி மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட வேன் ஓட்டுநரை போலீசார் போக்சோ வழக்கில், கைது செய்து சிறையில் அடைத்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை புதுச்சேரி மணவெளி தொகுதகுட்பட்ட தானாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆறு வயது சிறுமியிடம் அதே பள்ளி ஆசிரியர் மணிகண்டன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு பள்ளி மாணவியிடம் வேன் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமையில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நையினார்மண்டபத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (25), வேன் ஓட்டுநரான இவர் தினமும் பள்ளி மாணவ, மாணவிகளை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீடுக்கும் அழைத்து வரும் பணி செய்து வந்தார். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் வேனில் பயணித்த அரசு பள்ளியில் 9 ...
பழுதடைந்த அரசு பேருந்தை நகர்த்திய மாணவர்கள் வீடியோ வைரல்!

பழுதடைந்த அரசு பேருந்தை நகர்த்திய மாணவர்கள் வீடியோ வைரல்!

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரில், 2B நம்பர் தமிழ்நாடு அரசு பேருந்து இன்று இரவு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் நோக்கி செல்லும் போது ஆரியபவன் அருகே பழுதடைந்து நின்றது.அப்போது பேருந்தில் இருந்த பயணிகளும், அருகில் நின்றிருந்த கல்லூரி மாணவர்களும் இணைந்து பேருந்தை தள்ளி நகர்த்த முயன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பேருந்துகளை முறையாக பராமரிக்காததின் விளைவாக அவை வழித்தடங்களில் பழுதாகி நின்று போக்குவரத்துக்கு இடையூறாகின்றன. இது போன்ற சம்பவங்கள் மின் கம்பங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் மோதும் கோர விபத்துகளுக்கும் காரணமாக இருக்கலாம்.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசு போக்குவரத்து துறையின் பராமரிப்பு குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.  ...

மதுபோதையில் வன்முறை: திமுக நிர்வாகிகள் மீது புகார்!

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில், திமுக 11வது வார்டு செயலாளர் அப்துல் ஜாபர் மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகி லட்சுமணன், மதுபோதையில் நேஷனல் மளிகைக் கடைக்கு சென்றனர். கடை ஆயிப்கான் என்பவருக்கு சொந்தமானது, மேலும் தேவகோட்டை ராம்நகர் எழுவன்கோட்டை சாலையில் அமைந்துள்ளது.கடைக்காரர் பொருட்களை இலவசமாக வழங்க மறுத்ததை தொடர்ந்து, இருவரும் கடையில் வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் CCTV கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.கடை உரிமையாளர் சரவணன், தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) கௌதம் நேரில் விசாரணை மேற்கொண்டார். சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.CCTV காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

நக்சா திட்டம் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சிவகங்கை
நகர்ப்புற வாழ்விடங்களுக்கான தேசிய புவிசார் அறிவியல் ரீதியான நில அளவை (நக்சா) திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டுகளில் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள நகர்ப்புற வாழ்விடங்களுக்கான தேசிய புவிசார் அறிவியல் ரீதியான நில அளவை (நக்சா) திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தொடங்கிவைத்தார்.நக்சா நில அளவை திட்டம் மூலம் அளில்லா வானூர்திகளை (Drone) பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு புல வரைபடங்கள் உருவாக்கப்படும். இந்த முறையின் மூலம் சொத்து வரி வசூல் எளிமையாகும். மேலும், புவி அமைவிட புள்ளிகளுடன் கூடிய வரைபடங்கள் மற்றும் சொத்து வரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில அளவைகள் நில உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, ஜார்கண்டில் நடைபெறும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வு செய...
போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு – அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

போஷ் (POSH) அழகு நிலையம் திறப்பு – அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

திருச்சி
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் புதிய POSH (போஷ்) அழகு நிலையம் திறப்பு விழா அதன் நிறுவனர் நசிகா ரிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி நிறுவனத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார்.மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் மு. பீர்முகமது, பகுதி துணை செயலாளர் சந்திரமோகன், மற்றும் திருச்சி மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பைசல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.POSH அழகு நிலையம் அதி நவீன தொழில்நுட்பத்துடன், சிறந்த வல்லுநர்களை கொண்டு ஃபேஸ் வாஷ், ஹேர் கட்டிங், திருமண அலங்காரம், ஹேர் டை உள்ளிட்ட பல்வேறு அழகு சேவைகளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குறைந்த செலவி...
நிழல் தரும் மரங்களை வெட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் மனு

நிழல் தரும் மரங்களை வெட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் மனு

பொள்ளாச்சி
பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வோர் திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமில், பாஜக நகர தலைவர் பரமுகுரு தனது நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு மனு அளித்தார்.அதில், பொள்ளாச்சி நகராட்சி 11வது வார்டில் உள்ள மகாலிங்கபுரம், ரவுண்டானா, ஏ.எஸ்.டி.புரம், தாகூர் வீதி, திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் இல்லாத நிலையில், பசுமையாக வளரும் மரங்களை சிலர் தங்களது சொந்தலாபத்திற்காக வெட்டி அகற்றியுள்ளனர்.இதனை கண்டித்த பாஜகவினர், மரங்களை வெட்டியவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.  ...
பிறந்தநாள் விழாவில் மோதல்: வட மாநில தொழிலாளர் கொலை

பிறந்தநாள் விழாவில் மோதல்: வட மாநில தொழிலாளர் கொலை

பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அருகிலுள்ள அரசம்பாளையம்-காரச்சேரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கேஸ் நிரப்பும் ஆலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேர் வேலை செய்து வந்தனர். நேற்று இரவு, அங்குப் பணிபுரியும் ஒரு சிறுவனின் பிறந்தநாளை வட மாநில தொழிலாளர்கள் மது விருந்துடன் கொண்டாட முடிவு செய்தனர். மது அருந்திய பிறகு, தொழிலாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மத்திய பிரதேச மாநிலம் ராய்சேன் பகுதியைச் சேர்ந்த பூபேந்திரா (21) மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் முன்பு ஏற்பட்ட சண்டையின் காரணமாக மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் சாருப் (20) மற்றும் மற்றொரு 17 வயது சிறுவன், பூபேந்திராவை இரும்புக் கம்பியால் தாக்கினர்.தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பூபேந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக கிணத்துக்கடவு போலீ...
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல் கரீம்”<br><br>

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல் கரீம்”

திருச்சி
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் கோரிக்கை வைத்துள்ளார்.திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையிலான கூட்டத்தில், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான், மாநிலச் செயலாளர் சபீர் அலி, மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாநாட்டின் நோக்கம், இஸ்லாம் குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைய சமுதாயத்தை நல்ல வழியில் வழிநடத்துவதாகும் என அவர் தெரிவித்தார்.திருப்பரங்குன்றத்தில் தர்கா-கோவில் விவகாரம் மூலம், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்து-முஸ்லிம் மக்களிடையே மத வெறியை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டனம் தெரிவித்தார். ...
மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

திருச்சி
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரியின் வழிகாட்டுதலின் கீழ், திருச்சி மாவட்ட இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யாசர் ஷெரிப் தலைமையிலாக, மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் பாபு, இளைஞர் அணி பொருளாளர் ஹம்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் M. முஹமது ஷரிப் (M.Com, M.Phil) கலந்து கொண்டு, இளைஞர் அணியின் அவசியம், அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு நோக்கம் குறித்து விரிவாக உரையாற்றினார்.இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.கூட்டத்தில் இளைஞர் அணியின் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், அரசியல் பயிலரங்கம், மற்றும் உறுப்பினர் சேர்க்கை முக...
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக பக்தர்களை ஈர்க்கிறது, மேலும் அமாவாசை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகும். சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த ஆண்டின் குண்டம் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயான பூஜை 11-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு, குண்டம் கட்டுதல் 13-ஆம் தேதி, சித்திரத்தேர் வடம் பிடித்தல் மாலை 6 மணிக்கு, குண்டம் பூ வளர்த்தல் இரவு 10 மணிக்கு நடைபெற்றன.முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை 6 மணிக்கு அம்மன் கலசம் உப்பாற்றில் முத்தரிக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அம்மன்...